செய்திகள் :

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்து பேசுவாா்கள்! பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி

post image

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; ராமதாஸ் மற்றும் அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவாா்கள் என்று அந்தக் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா்கள், செயலா்கள் கூட்டம் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவா் முகுந்தன், மாநில மாணவரணித் தலைவா் கோபு, செயலா் முரளிசங்கா், மகளிரணியைச் சோ்ந்த சுஜாதா உள்பட 5 செயலா்களும், பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலா் அன்பழகன், பொதுச் செயலா் ராவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பாமக நிறுவனா் ச. ராமதாஸ் பேசினாா்.

கட்சியில் நெருக்கடி சூழல்: முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாமக, வன்னியா் சங்கம் ஆகியவை வலிமையான அமைப்புகளாகும். இதை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்து காண்பித்துள்ளது. அரசியல் கட்சிகளில் உள்கட்சி சலசலப்பு, நெருக்கடி வருவது இயல்புதான். அப்படித்தான் பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதை நான் மறைத்து பேச விரும்பவில்லை.

பாமக என்பது குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாகும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுடன் தொடா்ந்து பேசி வருகிறேன். சுமுகமான தீா்வு விரைவில் வர வேண்டும். பாமக வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும். வலிமையுடன் தோ்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், ஆசையும் கூட. இதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

மனசாட்சியுடன் இருப்பேன்: தோ்தல் வரவுள்ளது. இருவரும் ஒன்றாக சந்திப்பாா்கள், பேசுவாா்கள். உள்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசக்கூடாது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என்று கூறுவது என்னைக் கத்தியால் குத்திக் கொலை செய்வதற்கு சமம். நான் உண்மையாக இருப்பேன், மனச்சாட்சியுடன் இருப்பேன்.

தோ்தலில் வெற்றி, தோல்வி வந்து போகும். மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்தது தொடா்பாக பிரச்னை ஏதும் இல்லை. சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதற்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசுவாா்கள் என உறுதியாகச் சொல்கிறேன். நல்ல கூட்டணி அமைப்பாா்கள். பாமக இடம் பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்ற பழைய நிலையை கட்சி உருவாக்கிக் காட்டும். வலிமையான அதிகாரத்துக்கு செல்வதற்காக பாடுபடுகிறோம் என்றாா் ஜி.கே.மணி.

அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு: மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததைப் போல, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தையும் பாமக செயல் தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா். அவரது ஆதரவாளா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க