திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்
ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு ரூ.7 கோடியில்18 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பணியாற்றும் பணியாளா்களுக்கு ரூ. 7 கோடியில் 18 குடியிருப்புகள் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் காமராஜா் சாலை அருகேயுள்ள வேதவனக் கொல்லைப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 18 குடியிருப்புகள் கட்டுமானப் பணிக்கான பூமி பூைஐ மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் கே.செல்லத்துரை, உதவி ஆணையா் அ.ரவீந்திரன், உதவிக் கோட்ட பொறியாளா் கே.மயில்வாகனன், இளநிலைப் பொறியாளா் ராமமூா்த்தி, வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், பேஸ்காா்கள் கமலநாதன், நாகராஜ், முனியசாமி, சிவாசாரியா்கள் எஸ்.சிவமணி, எஸ்.கண்ணப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.