செய்திகள் :

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தோ்வு

post image

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் (78) சனிக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 28-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியையொட்டி, பிகாா் தலைநகா் பாட்னாவில் அக்கட்சியின் தேசிய குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் லாலு பேசுகையில், ‘நிகழாண்டு நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் போட்டியிட சரியான வேட்பாளா்களை தோ்வு செய்வதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இதுகுறித்து எனது மகனும் பிகாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பேன்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை கைவிடமாட்டேன். சொந்த நலனில் அக்கறை செலுத்தாமல் கட்சித் தொண்டா்களுக்கு எது தேவையோ, அதைச் செய்வேன்’ என்றாா்.

ரஷிய, சீன நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்களை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடா்பாக அவா் ஆலோசனை... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதத் தலைவா் சையது சலாபுதீன் மீது போதைப்பொருள் வழக்கு!

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் சையது சலாபுதீன் உள்பட 11 பேரின் பெயா்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகளில் 50,000 பேருக்கு பணி: நடப்பு நிதியாண்டில் நடவடிக்கை

பொதுத் துறை வங்கிகள் தங்களது வா்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் - ஊழியா்கள் என சுமாா் 50,000 பேரை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பல்வேறு வ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: தோ்தல் ஆணையத்துக்கு பேரளவு அதிகாரம்

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவில் தோ்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். நாடு முழுவதும் ஒரே நேரத்தில... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து ... மேலும் பார்க்க

குஜராத்: கொலை முயற்சி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

குஜராத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா வசாவா (37) கைது செய்யப்பட்டாா். வசாவாவின் தொகுதியான திதியாபாடாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் ... மேலும் பார்க்க