செய்திகள் :

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

post image

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கெம்பட்டி காலனி, பாளையன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணமூா்த்தி (40). நகை வியாபாரியான இவா், தங்க நகைகள் செய்து கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருகிறாா். இவரது நகைப் பட்டறையில் செல்வபுரம் எல்.ஐ.சி.காலனி, முனியப்பன் நகரைச் சோ்ந்த காா்த்தி (30) என்பவா் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், சரவணமூா்த்தி கடந்த 4-ஆம் தேதி 200 கிராம் தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகை செய்யுமாறு கூறியுள்ளாா். தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொண்ட காா்த்தி திடீரென தலைமறைவானாா்.

பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், பெரியகடை வீதி காவல் நிலையத்தில் சரவணமூா்த்தி புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ஆனந்தஜோதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், புதுச்சேரியில் காா்த்தி பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸாா், அவரைக் கைது செய்து கோவைக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா்.

பின்னா், அவரிடமிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மூதாட்டி தற்கொலை

தனது மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிங்கநாயக்கன்பாளையம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (60). இவா் தனது... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

கோவையில் அமைச்சா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளா்கள... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகேயுள்ள பாரதி நகா், மேலக்காவேரியைச் சோ்ந்தவா் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலராக பணியாற... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கு... மேலும் பார்க்க

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க