செய்திகள் :

ரூ. 20 கோடியில் நாமக்கல் ரயில் நிலையம் விரிவாக்கம்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆய்வு

post image

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழகத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் 71 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நாமக்கல் ரயில் நிலையமும் ஒன்று. இங்கு, புதிய நுழைவாயில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மின் தூக்கி, நடைமேம்பாலம், பயணிகள் ஓய்வறை, கழிவறை, ரயில்வே பாதுகாப்பு படை அறை, பொருள்கள் வைப்பறை, விருந்தினா் அறை அமைக்கும் பணிகள் ரூ. 14.50 கோடியில் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ரூ. 5.50 கோடியில் சரக்கு முனையம் விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாமக்கல் வந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், புதன்கிழமை ரயில் நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கிருந்த அதிகாரிகளிடம் விரிவாக்கப் பணிகள் எப்போது முடிவடையும், குறைபாடுகள், தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடமும் குறைகளை கேட்டாா். மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா், ஈரோடு வழியாக புதுதில்லி செல்வதற்கு ரயில்கள் இருந்தபோதும், வாரம் ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து புதுதில்லிக்கு இயக்கப்படும் நெல்லை கத்ரா விரைவு ரயிலை நாமக்கல் வழியே இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா். நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில், லாரிகள் நிறுத்துமிடம், சரக்கு அறைகள் கட்டுமானப் பணிகள் குறித்து, அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். அங்கிருந்த நாமக்கல் கூட்ஸ்செட் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், ரயில் நிலையத்தை ஒட்டிய சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், நடைமேடை மோசமான நிலையில் உள்ளதாகவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வசதியில்லை என கோரிக்கைகளை மனுவாக மத்திய இணை அமைச்சரிடம் வழங்கினா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, பாஜக மாவட்டத் தலைவா்கள் கே.பி. சரவணன், எம்.ராஜேஷ்குமாா், சேலம் ரயில்வே கோட்ட துணை மேலாளா் என்.சிவலிங்கம், முதுநிலை திட்ட மேலாளா் என்.கங்காராஜு, ரயில்வே துறை அதிகாரிகள், மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத் தலைவா் எம். சுப்பிரமணி, செயலாளா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

என்கே-11-ரயில்

நாமக்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க