செய்திகள் :

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

post image

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று அதன் நிர்வாக இயக்குநர் பல்ராம் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியை சேர்ந்த பிசி ஜுவல்லர்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் 52 ஷோரூம்களைக் கொண்டுள்ளதாகவும் அவற்றில் 49 நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்றது. இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.335 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.1,780 கோடியாக இருந்த நிகரக் கடன் ஜூலை மாத இறுதியில் ரூ.1445 கோடியாகக் குறைந்துள்ளது.

பிசி ஜுவல்லர் நிறுவனம் தனது நிதி நிறுவனங்களுடனான தீர்வு ஒப்பந்தத்தின்படி, 2024-25 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை 50 சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைத்துள்ளதாகக் தெரிவித்தது. முந்தைய நிதியாண்டின் இறுதியில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் 8.7 சதவிகிதமாகவும், ஜூலை 2025ல் 10.1 சதவிகிதமாகவும் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் மொத்த வருமானம் ரூ.807.88 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு இது ரூ.439.78 கோடியாக இருந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.161.93 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வரிக்கு முந்தைய லாபம் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் ரூ.84.64 கோடியிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ரூ.163.58 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.71.39 கோடி வரி திரும்பப் பெற்றதால் அதன் நிகர லாபம் அதிகரித்தது என்றது.

2024-25 நிதியாண்டில், நிறுவனம் ரூ.577.70 கோடி நிகர லாபத்தையும், ரூ.2,371.87 கோடி மொத்த வருமானத்தையும் ஈட்டியுள்ளது.

இதையும் படிக்க: சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

PC Jeweller on track to be debt-free by next March

அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!

குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட்... மேலும் பார்க்க

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 26 சதவிகிதம் அதிகரித்து ரூ.292.5 கோடியாக உள்ளதாக ... மேலும் பார்க்க

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.98,820 ஆக உள்ளதாக அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்தது. அதே வேளையில் 99.9 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் அதன் முந்தைய சந்தை முடிவில் ... மேலும் பார்க்க

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 6 அன்று, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வங்கி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான ... மேலும் பார்க்க