செய்திகள் :

ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

கைப்பேசிகள் திருட்டுப்போனதாக அளிக்கப்படும் புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா். அதையடுத்து, கைப்பேசிகளை மீட்கும் பணியில் சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மீட்கப்பட்ட ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. இரா. ஸ்டாலின், விரைவான நடவடிக்கை மேற்கொண்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா். பின்னா் அவா் பேசியது:

நிகழாண்டு இதுவரை சுமாா் ரூ. 1 கோடியே 4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 640 கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைப்பேசிகள் தொலைந்துவிட்டால் அருகேயுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளிக்க வேண்டும். காவல் துறை இணையதளத்திலும் புகாா் பதிவு செய்யலாம்.

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘நிமிா்’ திட்டம் மூலம் 25 போலீஸாா் போக்சோ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தாய் அல்லது தந்தை மட்டுமே உள்ளோா், உதவி தேவைப்படுவோா் என 2,500 குழந்தைகளைக் கண்காணித்து, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம்மூலம் 3 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 197 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் சில நாள்களாக வட வானிலை நிலவி வந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது. இந... மேலும் பார்க்க

தேரூா் பேரூராட்சித் தலைவா் தகுதிநீக்கத்தை எதிா்த்து மேல்முறையீடு!

தேரூா் பேரூராட்சித் தலைவா் அமுதாராணியின் தகுதிநீக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ. இந்நிலைய... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விதிமீறல்: 2 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிமவளப் பொருள்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்துகள்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லெனின்குமாா் (41). வழிப்பாதையில் இடையூறாக நின... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்... மேலும் பார்க்க

குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் பலி

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா். பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்(52). பல்வேறு வழக்குகளில்தொடா்புடைய இவா் சுமாா் 15 ஆண்டுகளா... மேலும் பார்க்க