செய்திகள் :

ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை... காரணம் என்ன?

post image

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் காஞ்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

“காதலிக்க நேரமில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வசுந்தரா தேவி என்ற இயற்பெயரை கொண்ட காஞ்சனா திரைத்துறைக்காக இயக்குனர் ஸ்ரீதர் அந்த பெயரை மாற்றியுள்ளார். 46 ஆண்டுகள் சினிமாவில் ஓய்வே இல்லாமல் நடித்த இவர் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கூட பாட்டியாக நடித்திருந்தார் காஞ்சனா.

தற்போது இவருக்கு 85 வயது ஆகிறது, இவர் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளை கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார்.

சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் சொத்துகளை வாங்கியுள்ளார். அந்த சொத்துகளை அவரது உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த சொத்துகள் மீண்டும் தனக்கு திருப்பி கிடைத்தால் திருப்பதி வெங்கடாசலபதிக்கு எழுதி வைப்பதாக வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சொத்து வழக்கில் இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவே, ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்ததாகவும் அவர் கூறினார். இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. ”முதுமைடைந்து அல்லது உடல் ரீதியாக செயல் இழந்து போகும் தான் இந்த வயதில் உயிர் வாழ்வது உண்மையிலே எவ்வளவு பெரிய அதிசயம் என்று நான் உணர்கிறேன்” என்றும் “இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை” என்றும் அந்த பேட்டியில் நடிகை காஞ்சனா கூறியிருந்தார்.

``என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' - நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.சமீபத்தில் `உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட... மேலும் பார்க்க

Rajinikanth: "என் பாசிடிவிட்டிக்கான சீக்ரெட் இதுதான்..." - ஆன்மிக அனுபவம் பகிர்ந்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்தில் க்ரியா யோக பயிற்சி பெறுவதற்காகச் சென்றிருக்கிறார். தனது அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ... மேலும் பார்க்க

Vidaamuyarchi: ``அஜித் சார் அருமையாக நடிச்சுருக்காரு, ஆனா..." - வெங்கட் பிரபு கூறியதென்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 6) ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன்... மேலும் பார்க்க