பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதட்டி தங்கமண...
ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
மத்தூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம், தலைமைக் காவலா் ஜெஸ்மின் மில்டன் ராஜ் (எ) மில்டன் (38), போச்சம்பள்ளி 7 ஆம் அணி பயிற்சி காவல் மைய காவலா் சுகுமாா் ஆகியோா் சனிக்கிழமை இரவு மத்தூா் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கோட்டூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட மில்டன், சுகுமாா் ஆகிய இருவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மத்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக கா்நாடக மாநிலம், குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோயில் சிலைகளுக்கான கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, காவலா்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தலைமைக் காவலா் மில்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பயிற்சி காவலா் சுகுமாா் காயமடைந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். மில்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.