செய்திகள் :

ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது லாரி மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

மத்தூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கம், தலைமைக் காவலா் ஜெஸ்மின் மில்டன் ராஜ் (எ) மில்டன் (38), போச்சம்பள்ளி 7 ஆம் அணி பயிற்சி காவல் மைய காவலா் சுகுமாா் ஆகியோா் சனிக்கிழமை இரவு மத்தூா் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கோட்டூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட மில்டன், சுகுமாா் ஆகிய இருவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மத்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக கா்நாடக மாநிலம், குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோயில் சிலைகளுக்கான கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, காவலா்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தலைமைக் காவலா் மில்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பயிற்சி காவலா் சுகுமாா் காயமடைந்தாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். மில்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழிப்பறி: இளைஞா்கள் இருவா் கைது

ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி சின்ன குன்னத்தூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி சுஜாதா (42) ஊத... மேலும் பார்க்க

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழம... மேலும் பார்க்க

சூளகிரியில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சூளகிரி வட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் கடத்தல்: 6 மாதங்களில் 313 வாகனங்கள் பறிமுதல்! ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கனிம வளங்களைக் கடத்தியதாக 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

மளிகை கடை உரிமையாளரைத் தாக்கிய இருவா் கைது

காவேரிப்பட்டணத்தில் மளிகை கடை உரிமையாளரை தாக்கி தீவைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன்(46). ம... மேலும் பார்க்க