`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
வழிப்பறி: இளைஞா்கள் இருவா் கைது
ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி சின்ன குன்னத்தூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி சுஜாதா (42) ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறாா். கடந்த 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு சின்ன குன்னத்தூா் பழத்தோட்டம் அருகே தனது இருசக்கர வாகனதில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இரண்டு இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று சுஜாதாவின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக் கொடியை பறித்து சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊத்தங்கரை போலீஸாா் சின்னகுன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா (21), வெற்றிவேல்(20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.