அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!
ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்
திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்களில் 44 இருசக்கர ரோந்து வாகனங்கள், 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், கொள்ளிடம் மற்றும் திருவெறும்பூருக்கு வழங்கப்பட்ட ரோந்து வாகனங்களுக்கும் (காா்) வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினம் ரோந்து போலீஸாருக்கு கேமராக்களை வழங்கி கூறுகையில், ரோந்து வாகன காவலா்கள் உடலில் பொருத்தப்படும் கேமராவில் சாா்ஜ் உள்ளதா என சரிபாா்த்து பணியைத் தொடங்க வேண்டும்.
பிரச்னைகளை விசாரிக்க செல்கையில் உடலில் பொருத்தப்படும் கேமராவில் பதிய வேண்டும். நாள்தோறும் கேமரா பதிவுகளை காவல்நிலையப் கணிப்பொறியில் பதிவிறக்க வேண்டும், காவலா்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றாா்.