செய்திகள் :

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

post image

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதையும் படிக்க: கைவிரல் முறிவு; மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

இந்தப் போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்களும், ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.

ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியதில் மகிழ்ச்சி

குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவிடம் நான் அதிக அளவிலான விஷயங்களை கூற வேண்டியிருக்காது என நினைக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் அவர் 7000 ரன்கள் எடுத்துள்ளார் என நினைக்கிறேன். உலகில் உள்ள பல்வேறு சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவருடன் இணைந்து பேட்டிங் செய்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவருடன் இணைந்து அணிக்காக ரன்கள் குவித்தது மகிழ்ச்சியளித்தது என்றார்.

இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க

191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேல... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்ற... மேலும் பார்க்க