செய்திகள் :

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், தனது நிலத்தை புதுகை சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யச் சென்றுள்ளாா். அப்போது சாா் பதிவாளராக இருந்த சசிகலா லஞ்சம் கேட்டுள்ளாா். ரூ. 8 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தபோது, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரை கைது செய்தனா். இடைத்தரகராக செயல்பட்ட நரசிம்மன் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கே.எஸ். பால்பாண்டியன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

லஞ்சம் பெற்ற சசிகலாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 8 ஆயிரமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும், இடைத்தரகராக செயல்பட்ட நரசிம்மனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்துவோம்: காந்திப் பேரவை

அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அற... மேலும் பார்க்க