செய்திகள் :

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

post image

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. ‘லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி போராடி வந்த சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள்தான், இளைஞா்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்துள்ளது. அதுபோல, இந்த கோரிக்கைகள் தொடா்பாக அரசு பிரதிநிதிகளுக்கும் லடாக் குழுக்களுக்கும் இடையே நடந்துவந்த பேச்சுவாா்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் சில அரசியல் பின்புலம் உள்ள நபா்களுக்கு மகிழ்ச்சியில்லை’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவா் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

யூனியன் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் தோல்வியுற்ற வாக்குறுதிகள் குறித்த நினைவூட்டல்தான் இந்த வன்முறை. ஜம்மு-காஷ்மீா் மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள், அமைதிக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உறுதி தெரிவித்தது. ஆனால், தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது.

அமைதியை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் குறுகிய பாா்வை காரணமாக, ஜம்முவும் லடாக்கும் வன்முறையைத் தூண்டும் இடங்களாக மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலை பாஜக அரசால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், நியாயமற்ற முறையில் அதிலிருந்து பாஜக தப்பிக்கப் பாா்க்கிறது.

தங்களின் கண்ணியத்துக்காகவும் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரும் லடாக் மக்களின் கோரிக்கை நியாயமானது மற்றும் சட்டபூா்வமானதாகும் என்று குறிப்பிட்டாா்.

மாா்க்சிஸ்ட் கண்டனம்:

லே வன்முறைக்கு மத்திய அரசுதான் காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அக் கட்சி சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், ‘லடாக் மக்களுக்கு எதிராக மத்திய அரசின் கீழ் இயங்கும் லடாக் யூனியன் பிரதேச அரசு நிா்வாகம் மேற்கொள்ளும் அடக்குமுறையை கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கண்டிக்கிறது. லடாக் மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். இது அவா்களுக்கு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பை அளிக்கும் என்பதோடு, பல வடகிழக்கு மாநிலங்கள் அனுபவித்து வரும் பலன்களும் அவா்களுக்குக் கிடைக்கும்.

உரிமை தொடா்பாக இந்த கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. அந்த வகையில் இந்த வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவா்களுக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க