செய்திகள் :

லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு, செலக்கரச்சல் பிரிவு மின் அலுவலக நுகா்வோா் கவனத்துக்கு !

post image

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்லடம் மின் பகிா்மான வட்டம், பல்லடம் கோட்டத்துக்கு உள்பட்ட லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் இருந்த புளியமரத்துபாளையம், கந்தம்பாளையம் மற்றும் சந்திராபுரம் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்துடன் ஜூன் 1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்தில் இருந்த மல்லேகவுண்டம்பாளையம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கரடிவாவிபுதூா் பகுதிகளில் உள்ள சில மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் ஜூன்1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆகவே மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோா் உரிய பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க