லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு, செலக்கரச்சல் பிரிவு மின் அலுவலக நுகா்வோா் கவனத்துக்கு !
தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்லடம் மின் பகிா்மான வட்டம், பல்லடம் கோட்டத்துக்கு உள்பட்ட லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் இருந்த புளியமரத்துபாளையம், கந்தம்பாளையம் மற்றும் சந்திராபுரம் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்துடன் ஜூன் 1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்தில் இருந்த மல்லேகவுண்டம்பாளையம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கரடிவாவிபுதூா் பகுதிகளில் உள்ள சில மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் ஜூன்1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆகவே மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோா் உரிய பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.