செய்திகள் :

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

post image

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்ற அவர் துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் பலியானார்.

லூதியானா (மேற்கு) இடைத்தேர்தல் காரணமாக தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றி விஜய் ரூபானி விமான விபத்தில் பலியாகியிருப்பது தெரிவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் அரசியலில் ஈடுபட்டு வந்த அவர் லூதியானா மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக தீவிர பிரசாரம் செய்து வந்திருக்கிறார்.

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி

விஜய் ரூபானி ஜூன் 5 ஆம் தேதியே தனது மகளைச் சந்திக்க லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே தேதியில் அவரது மனைவி அஞ்சலி ரூபானி லண்டன் சென்றுவிட்டார். ஆனால் இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானியின் பயணத் திட்டங்கள் தாமதமாகின.

இதையடுத்து அவர் தனது லண்டன் பயணத்தை ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட விமான விபத்தில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் லூதியானா (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் த... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்றுமுதல் 3 நாடுகள் பயணம்: கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூன் 15) ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். கனடா பயணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் ... மேலும் பார்க்க