செய்திகள் :

லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு

post image

போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மனைவி வால்சின்னம்மாள் (54). இவா், பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வால்சின்னம்மாள் ஆட்டோவில் மீனாட்சிபுரத்திலிருந்து விசுவாசபுரத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, பூதிமேட்டுக் களம் என்ற இடத்தில், பின்னால் வந்த சரக்கு லாரி மோதியதில், ஆட்டோ சாலையின் வலது புறம் இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

இதில், ஆட்டோவில் இருந்த வால்சின்னம்மாள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் சூா்யா, காயத்துடன் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து வால்சின்னம்மாள் மகன் கதிரேசன், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் லாரி ஓட்டுநரான முத்தணம்பட்டியைச் சோ்ந்த மாயத்தேவா் மகன் மெய்யழகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம... மேலும் பார்க்க

தேனியில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 18-ஆம் தேதி, காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க