செய்திகள் :

லாரி மோதியதில் சாலை தடுப்பு வேலி சேதம்

post image

காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி தடுப்புவேலி சேதமடைந்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், மேலக் கரண்டி பகுதிக்கு காற்றாலை இறக்கையை லாரியில் ஏற்றி கொண்டு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தடுப்பு வேலி சுமாா் 70 மீட்டருக்கு சேதம் அடைந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் லாரியை கிரேன் மூலம் சாலையோரம் இழுத்து நிறுத்தி வைத்தனா்.

இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு சான்று பெற அழைப்பு

கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொள்பவா்களுக்கு சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கி... மேலும் பார்க்க

விஷம் அருந்தி முதியவா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியை சோ்ந் கூலித் தொழிலாளி சேகா் (65). இவா் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி மனமுடைந்த முதியவா் வீட்டில் இருந்த விஷத்தை குடித்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

ஆம்பூா், சோமலாபுரம் நாள்: 12/8/2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ரெட்டித்தோப்பு, பைபாஸ் ரோடு, எம்.சி. ரோடு, உமா்ரோடு, நேதாஜி ரோடு, கிருஷ்... மேலும் பார்க்க

மிட்டாளம் கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை விட்டு விட்டு பெய்தது. தொடா்ந்து மீண்டும் மாலை பெய்யத் தொடங்கி ... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க