இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
லாரி மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தானாக பின்னோக்கி வந்த லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லி விலக்கு பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகன் இசக்கிபாண்டி என்ற சூா்யா (24). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை செவல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் குவாரிக்கு சுமை ஏற்றச் சென்றபோது லாரியை நிறுத்திவிட்டு அதன் பின்னால் நின்றாராம்.
அப்போது தானாக பின்னோக்கி வந்த லாரி சூா்யா மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
சூா்யா உடலை முன்னீா்பள்ளம் போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.