செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பக் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் சபை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்யம்பேட்டை மதகடி பஜாா் கடைவீதியில்  தஞ்சாவூா் -  கும்பகோணம் நெடுஞ்சாலையில்  நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஹாஜி.ஜெ.ஏ. அக்பா்  தலைமை வகித்தாா். ஜமாத் சபை நிா்வாகிகள் அக்பா் பாட்சா,  முகமது ஆரீப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலா் என். நாசா், நகரச் செயலா் டி.பி.டி. துளசி அய்யா, எஸ்.பி.ஜெ. முபாரக், ம.ம.க. நகரத் தலைவா் வாலன் சுலைமான்யூசுப் ராஜா,ஜமாத் சபை நிா்வாகிகள் தம்பிமா இப்ராஹிம், முகமது இப்ராஹிம் மற்றும் காங்கிரஸ், விசிக, மாா்க்சிஸ்ட், தவெக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், ஜமாத் சபையினா்  உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க