செய்திகள் :

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் மீது தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

post image

வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள, நோபல் பரிசுப்பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் தற்போது அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று, அந்த அருங்காட்சியகத்துக்கு, ஒரு நபர் தனது குடும்பத்துடன் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாகன நிறுத்துமிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக அந்நபருக்கும், அங்குப் பணிப்புரியும் ஊழியருக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் அங்குள்ள அலுவலக அறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு எதிராக, கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டமானது வன்முறையாக மாறி, ஒரு கும்பல் அருங்காட்சியகத்தின் அரங்கத்தை அடித்து நொறுக்கியதுடன், அதன் இயக்குநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள, 3 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்து, 5 நாள்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷாஸாத்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் தாகூர் குடும்பத்தின் பூர்வீக இல்லம்m மற்றும் வருவாய் அலுவலகமாகும். இத்துடன், அங்குதான் ரவீந்திரநாத் தாகூர், தனது பல முக்கிய இலக்கிய படைப்புகளை எழுதியதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா். அகமதாபாத்... மேலும் பார்க்க

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க