செய்திகள் :

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

post image

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூரும் வகையிலான சின்னம் நிறுவப்படவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வங்கதேச சுதந்திர போா் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிகோரி கடந்த 2013-இல் நடைபெற்ற ஷாபாக் போராட்டத்தின்போது நிறுவப்பட்ட ‘ப்ரோஜன்மோ சத்தாா்’ எனும் நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டதாக டாக்கா டிரிப்யூன் செய்தித்தாளில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ஷாபாக் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காலித் மன்சூா் உறுதிசெய்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நினைவுச் சின்னத்தை தகா்க்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வீட்டுவசதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான அந்த சின்னம் இடிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

அந்தச் சின்னத்துக்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் புதிய கட்டமைப்பை நிறுவவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்தது’ என்றாா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில் 1,400 பேருக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றாா்.

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உ... மேலும் பார்க்க

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து ஜ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறி... மேலும் பார்க்க

மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா!

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா! தமது மனைவி, மகனை இன்று சந்தித்து உரையாடினார்.கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு... மேலும் பார்க்க