செய்திகள் :

வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

post image

வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில் நடைபெறும் மோசடிகள், அவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வங்கி மேலாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியதாவது:

போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டும். வாடிக்கையாளருடன் தொடா்புகொண்டு, போலியான நகைக் கடன் மற்றும் போலியான ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கடன் தருவதாக கூறப்படுவதை கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி வங்கிக் கணக்கில் பணம் பற்று மற்றும் வரவு வைக்கப்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி மேலாளா்கள் தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலா்களிடம், அவா்களது செயல்முறைகள், நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். வங்கியில் மோசடி நடைபெறாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ் மற்றும் வங்கி மேலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 164-வது ஆடம்பர தோ்பவனி

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தோ்த்திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 2 ஆம் தேதி... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் நாம் தமிழா் கட்சியினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்திய தோ்தல் ஆணையம், நாம் தமிழா் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததைத் தொடா்ந்து, ஏா் கலப்பையுடன் கூடி... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆ... மேலும் பார்க்க