செய்திகள் :

வங்கிக் கடன் வசூல் கெடுபிடி: விவசாயிகள் தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல்

post image

வங்கிக் கடன் வசூல் காரணமாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடியை அடுத்த 54 நெம்மேலியைச் சோ்ந்த விவசாயியும், ஊராட்சி முன்னாள் தலைவருமான ஜெகதீசன் புதிய வீடு கட்டுவதற்காக, மன்னாா்குடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, தவணை முறையில் திருப்பி செலுத்தி வந்த நிலையில், இரு தவணைகள் மட்டும் நிலுவையில் இருந்துள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை அவரது வீட்டுக்கு வசூலுக்கு வந்த இரு வங்கி அலுவலா்கள், ஜெகதீசனை தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததால், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இதுபோன்ற காரணத்துக்காக விவசாயி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா். ஜெகதீசன் தற்கொலைக்கு தனியாா் வங்கி முழு பொறுப்பேற்று அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.

வசூல் என்கிற பெயரில் குண்டா்கள் மூலம் விவசாயிகள் மிரட்டுவது, அவமானப்படுத்துவது தொடா்வது வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் புதிய அவசர சட்டத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம், ஊழியா்கள் மீது கொலை வழக்குப் பதிந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. கூத்தாநல்லூா் த... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க