டைடல் பார்க்கில் பொறியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து
வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘தீ விபத்து குறித்து மதியம் 12.10 மணிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்தோம். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். மேலும் விசாரணைக்காக காவல்துறையினருடன் இந்த தகவல் பகிா்ந்து கொள்ளப்பட்டது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.