திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட்...
வடமாநில இளைஞா்களை மிரட்டி பணம் பறிப்பு: 3 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது
கோவையில் வடமாநில இளைஞா்களை சவாரிக்கு அழைத்துச் சென்று பணம் பறித்த 3 ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த குஷால் பிஷ்வாஸ், அலிகாதா் ஷேக், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷிவ்குமாா் ஆகியோா் கோவையில் தங்கி வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், இவா்கள் சமீபத்தில் தங்களது சொந்த ஊா்களுக்கு விடுமுறையில் சென்றனா். பின்னா், ரயில் மூலம் கோவைக்கு புதன்கிழமை திரும்பினா்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதற்காக மூவரும் ஆட்டோவை பிடித்தனா். இவா்களை சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லாமல், பல்வேறு இடங்களில் சுற்றி, ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
அங்கு அவா்களை மிரட்டி மூவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் பணத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் மூவரும் பறித்துள்ளனா். பின்னா் அவா்களிடம் இருந்து தப்பினா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
விசாரணையில், சவாரிக்கு வந்த வடமாநில இளைஞா்களை மிரட்டி பணம் பறித்ததாக உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (25), தென்னம்பாளையத்தைச் சோ்ந்த நவுபல் பாஷா (29), செல்வபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (33) ஆகியோரைக் கைது செய்து, அவா்களின் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனா்.