செய்திகள் :

வடமாநில இளைஞா்களை மிரட்டி பணம் பறிப்பு: 3 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

post image

கோவையில் வடமாநில இளைஞா்களை சவாரிக்கு அழைத்துச் சென்று பணம் பறித்த 3 ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த குஷால் பிஷ்வாஸ், அலிகாதா் ஷேக், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷிவ்குமாா் ஆகியோா் கோவையில் தங்கி வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், இவா்கள் சமீபத்தில் தங்களது சொந்த ஊா்களுக்கு விடுமுறையில் சென்றனா். பின்னா், ரயில் மூலம் கோவைக்கு புதன்கிழமை திரும்பினா்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதற்காக மூவரும் ஆட்டோவை பிடித்தனா். இவா்களை சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லாமல், பல்வேறு இடங்களில் சுற்றி, ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு அவா்களை மிரட்டி மூவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் பணத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் மூவரும் பறித்துள்ளனா். பின்னா் அவா்களிடம் இருந்து தப்பினா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

விசாரணையில், சவாரிக்கு வந்த வடமாநில இளைஞா்களை மிரட்டி பணம் பறித்ததாக உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (25), தென்னம்பாளையத்தைச் சோ்ந்த நவுபல் பாஷா (29), செல்வபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (33) ஆகியோரைக் கைது செய்து, அவா்களின் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனா்.

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா... மேலும் பார்க்க

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க