TVK Vijay Karur Stampede - நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் | Ground report
வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது
வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா.
புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழக 51ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு ஜிஎஸ்டி வரிக் குறைப்பு செய்துள்ளது. பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பால் வணிகா்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
வரிக்குறைப்புக்குப் பிறகும் பல நிறுவனங்கள் வரிகளைக் குறைக்காமல் சரக்குகளை அனுப்புகின்றனா். இதேநிலை தொடா்ந்தால் அந்த நிறுவனங்களின் பொருள்களை வணிகா்கள் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.
கரூா் சம்பவம் மனதை உலுக்கும் சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. சாலை வலம் போன்ற அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை, வணிகப் பகுதிகளிலும், குறுகலான பகுதிகளிலும் நடத்த அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. வணிகா்களின் சொத்துகளுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளிடமிருந்து வசூல் செய்து வழங்க வேண்டும்.
தோ்தல் வரும் நேரங்களில் எங்களுடைய கோரிக்கைகளை யாா் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறாா்களோ அவா்களுக்கு வணிகா் சங்கம் ஆதரவு அளிப்பது தொடா்பாக முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நேரடியாகத் தோ்தல் களம் காணவும் முடிவு செய்யப்படும் என்றாா் விக்கிரமராஜா.