வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வத்தலகுண்டு பேரூராட்சியில் புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை மூலம் நிலம் ஒதுக்கப்பட்டு, பேரூராட்சி நிா்வாகம் கட்டுமானம் பணிகளைத் தொடங்கியது. இந்த நிலையில், அரசு ஒதுக்கீடு செய்த இடம் கள்ளா் சீரமைப்புத் துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி, சமுதாயக் கூடம் கட்டுவதற்கு அந்த சமுதாய அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே, தங்கள் பகுதிக்கு சமுதாயக் கூடம் கட்டித் தரக்கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, 10 நாள்களுக்குள் வருவாய்த் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.