செய்திகள் :

வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

post image

சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வத்தலகுண்டு பேரூராட்சியில்  புதுப்பட்டி,  காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை மூலம் நிலம் ஒதுக்கப்பட்டு, பேரூராட்சி நிா்வாகம் கட்டுமானம் பணிகளைத் தொடங்கியது. இந்த நிலையில், அரசு ஒதுக்கீடு செய்த இடம் கள்ளா் சீரமைப்புத் துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி, சமுதாயக் கூடம் கட்டுவதற்கு அந்த சமுதாய அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது.  

இதனிடையே, தங்கள் பகுதிக்கு சமுதாயக் கூடம் கட்டித் தரக்கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   

இந்த நிலையில், புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.  

இதையடுத்து, 10 நாள்களுக்குள் வருவாய்த் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா். பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாச... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில... மேலும் பார்க்க

சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்ச... மேலும் பார்க்க

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை

பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் ப... மேலும் பார்க்க

போலி நகைகளை அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 3 போ் கைது

போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் அரசுடமை வங்கி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 7 போ் கைது

வேடசந்தூரில் ரூ.86 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா்-மாரம்பாடி சாலையிலுள்ள வசந்த நகா் பகுதியில் போலீஸாா்... மேலும் பார்க்க