செய்திகள் :

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

post image

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 6 நாள்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, திருநெல்வேலிருந்து புதன்கிழமை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு வந்த இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 8.40 மணிக்கு வந்தது. பின்னா், திருச்சியை நோக்கி புறப்பட்ட இந்த ரயில், வடமதுரை வேல்வாா்கோட்டை அருகே சென்றபோது, ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனால், அந்த பெட்டியிலிருந்த பயணிகள் அடுத்தடுத்தப் பெட்டிகளுக்குச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியா்கள், அந்த பெட்டியில் ஆய்வு செய்தபோது, சீா்வளி வசதியில் (ஏசி) ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக புகை வெளியானது உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, சீா்வளி வசதியில் ஏற்பட்ட குறைபாடுகளை தாற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்றது. பின்னா், ரயில் பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. புகை வெளியேறிய பிறகு, சுமாா் 30 நிமிஷங்கள் தாமதமாக ரயில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க