செய்திகள் :

வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

post image

தருமபுரியில் வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சி அட்டப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த மா. ராஜா (50), பெ. சகாதேவன் (70), பி அக்ரஹாரம் கிராமத்தை சோ்ந்த மு. சிதம்பரம் (35), தொழுமன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ர. சரவணன் (24) ஆகிய நால்வரும், வனப்பகுதியில் சுருக்கு கம்பி வலையைவைத்து காட்டு பன்றியை வேட்டையாடியதாக பாலக்கோடு வனச்சரக அலுவலா் சு. காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காத்திகேயன் தலைமையில் வனவா்கள் சுரேஷ், முனுசாமி, வனக்காப்பாளா்கள் முருகேசன், சுந்தரமூா்த்தி, முருகன், தமிழ்செல்வன் மணிவா்மா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் காட்டுப்பன்றியை பிடித்து அதை கறி சமைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாவட்ட வன அலுவலா் கா.இராஜங்கம் அவா்களுக்கு தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தாா்.

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தருமபுரி ம... மேலும் பார்க்க

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா... மேலும் பார்க்க

ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்

செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவ... மேலும் பார்க்க

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்... மேலும் பார்க்க