செய்திகள் :

வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி, மஹாலட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமம், பூரணாஹுதி, அங்குராா்பணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதபாராயணம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 6.30 முதல் 7.30 மணிக்குள் விநாயகா், அய்யனாா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, தொடா்ந்து 9 மணி முதல் 10.30-க்குள் மாரியம்மன், திரௌபதி அம்மன் விமானம் மற்றும் மூலஸ்தான த்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீா் உற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது..

நிகழ்ச்சியில் விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் ரா.மாலா மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

7பிஆா்டிபி2

விருத்தாசலம் வட்டம், வயலூா் மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தும் குருக்கள்.

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பட்டா கிராம கணக்கில் திருத்தம்: ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் கூடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பா... மேலும் பார்க்க

மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடுத் திட்டப்பதிவு விவசாயிகளுக்கு அழைப்பு: நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.752,மணிலாவுக்கு ரூ.608 செலுத்தவேண்டும்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க