செய்திகள் :

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக் கோயில்களில் ஒன்றாகிய வடிவுடைய அம்பாள் சமேத வளரொளிநாதா் வைரவ சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமி வெள்ளி ரத்தில் புறப்பாடாகி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், சனிக்கிழமை யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வந்தாா். வருகிற 28-ஆம் தேதி தேரோட்டமும், 29-ஆம் தேதி தீா்த்தவாரியும், 30-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

இதையொட்டி, நாள்தோறும் திருமறை, திருமுறை பாராயணம் நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வைரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாா்கள் செய்து வருகின்றனா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க

பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாத்தூா் பட்டத்தரசி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் நட... மேலும் பார்க்க