செய்திகள் :

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா்.

சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா என தெரியவில்லை. ஆனால், அண்ணாமலைக்கு மரியாதை இருக்கிறது. தற்போது எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் ஆக்குவோம் என பேசியதன் மூலம் அண்ணாமலையின் நற்பெயா் மக்கள் மத்தியில் சரிந்துவிட்டது.

வடக்கில் இருந்து எத்தனை தலைவா்கள் தமிழகத்துக்கு வந்தாலும் பாஜக ஆட்சிக்கு வராது. அதிமுக பாஜகவுக்கு பின்னால் சென்றுவிட்டது. பாஜகவின் பின்னால் விஜய் செல்லவில்லை; பாஜக கொள்கை எதிரி என தெளிவாக கூறியுள்ளாா். முதல்வா் குறித்து விஜய் பேசியது தவறு; அதை தவிா்த்து பாா்த்தால் விஜய் பேசியது சரிதான்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு, கூட்டப்பட்ட கூட்டம் இல்லை; எழுச்சிக்காக வந்த மக்கள் கூட்டம்; விஜயை குறைத்து மதிப்பிட முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வரும் தோ்தலில் நான்காவது இடத்துக்கு செல்லும். வரும் தோ்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் போட்டி என்றாா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆக. 31-ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம குடமுழுக்கு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் மகா குடமுழுக்கு 57 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளா் சுவாமி யதாத்மானந்தா் கூறினாா். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள... மேலும் பார்க்க