செய்திகள் :

வருவாய்த் துறையினா் பேரணி, தா்னா

post image

திருச்சியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தற்செயல் விடுப்பு, பேரணி மற்றும் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாகப் பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி தொடங்கிவைத்தாா். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெற்றிச்செல்வன், பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் சுடலையாண்டி சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை அலுவலகத்தை தாக்குவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நிலைகளிலும் வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

போராட்டத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் 65 சதவீதம் போ் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனா்.

மாநில நிா்வாகிகள் அய்யனாா், மகேஷ், ராஜேந்திரன், செல்வராணி செந்தமிழ் செல்வன், நவநீதன், பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா் சங்கர நாராயணன், மாவட்ட நிதிக் காப்பாளா் பொன்மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க