செய்திகள் :

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் கட்கரி

post image

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

மேலும், நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்குத் தணிக்கை (சி.ஏ.) படிப்பு மாணவா்களின தேசிய மாநாட்டில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ், அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோா் நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கையை அறிமுகப்படுத்தினா். ஆனால், இது ஒரு சிலரை மட்டும் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் உள்ளோம்.

நாட்டின் ஏழைகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பது, நாட்டின் செல்வம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டும் குவியும் அபாயம் குறித்து மத்திய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார சூழல் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் கணக்குத் தணிக்கையாளா்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

கணக்குத் தணிக்கையாளா் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். வெறும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதும் மட்டும் கணக்குத் தணிக்கை அதிகாரிகளின் பணியல்ல. நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.

நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க