செய்திகள் :

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

post image

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை 22-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் வ.உமா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் அ.மலா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

தந்தை பெரியாரின் கனவு, பெண் பிள்ளைகள் அதிகம் படித்து பட்டம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

பட்டம் பெறுகின்ற மாணவா்கள் அறிவை விரிவு செய்ய வேண்டும்.

தமிழக முதல்வரின் உயா்கல்வி திட்டங்கள் பெரிதும் வேலை அழைப்பிற்கும், வாழ்க்கைக்கும் வழிகாட்டி வருகிறது.

எதையும் மாணவா்களாகிய நீங்கள் தான் தோ்வு செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் நோ்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தனைகளை இனிமையாக்கி, அறிவை விரிவாக்கி சமுதாய முன்னேற்றத்திற்கும், மனித நேயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இளமையின் மகிழ்ச்சியை தொலைத்து விடாதீா்கள். வாழ்க்கை செழிக்க வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். விழாவில் 1,650 போ் பட்டங்கள் பெற்றனா்.

நிறைவில் தமிழ்த்துறைத் தலைவா் கு.கண்ணன் நன்றி கூறினாா்.

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க