செய்திகள் :

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

"ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை ராணுவ வீரர்கள் இரவு, பகல் என 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எல்லை பகுதியான தாரா வாலி கிராமம் முழுவதும் துப்பாக்கிச் சூடு எதிரொலித்தபோது, ​​10 வயது ஷ்ரவன் சிங் என்ற சிறுவன், இதில் அமைதியாக தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

”வளர்ந்ததும் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புவதாகவும், பெரியவன் ஆனதும் ராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாகவும்” அச்சிறுவன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த ராணுவ வீரர்களின் தாகத்தை ஷ்ரவன் தீர்த்து வைத்ததை அடுத்து ராணுவ உயர் அதிகாரியிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் மம்டோட் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷ்ரவன், தனது கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு தண்ணீர், ஐஸ், தேநீர், பால், லஸ்ஸி போன்றவை கொடுத்து அவர்களின் தாகத்தை தீர்த்துள்ளார்.

சிறுவனின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங், சிறுவன் ஷ்ரவனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின்... மேலும் பார்க்க

படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!

2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி ... மேலும் பார்க்க

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சி... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க