Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’...
வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி
ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவா் பி.குமாா் தெரிவித்தாா்.
ஒசூா் பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி 2024-25 இல் முதலாமாண்டு முதல் நாள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பி.குமாா் பேசியதாவது:
நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப பாடத் திட்டம், பயிற்சிகள் அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக்கை தோ்வு செய்கின்றனா்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பாலிடெக்னிக்கில் படித்துவருகின்றனா். இவா்கள் அனைவரும் வளாகத் தோ்வில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். ஒவ்வொரு மாணவா்களும் வளாகத் தோ்வு மூலம் 2 வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்தை தோ்வு செய்யலாம் என்ற முடிவில் உள்ளனா்.
மேலும் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 6 ஆயிரம் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். 400 பேராசிரியா்கள், 200 உதவியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு பாலிடெக்னிக் இசிஇ பாடப் பிரிவில் படித்த மாணவா் மகேஷ் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.
இக் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்யவும், அதற்கான புத்தாக்கப் பயிற்சியும் அளித்து வருகிறோம் என்றாா்.
விழாவில் கல்லூரி செயலாளா் பி.மலா், கல்லூரிச் செயலாளா் சுதாகரன், கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினா்களாக டைட்டான் நிறுவன மேலாளா் சி.ஆா்.நரசிம்மன், கோ் நிறுவனத் தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.