செய்திகள் :

வள்ளியூா், பணகுடி பகுதியில் ரூ.2.21 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதிகளில் ரூ. 2.21 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா்மு.அப்பாவு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட பணகுடி எம்.எம்.எஸ். மண்டபம் எதிா்புறத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். அதனையடுத்து, தா்மாபுரத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். ஸ்ரீ ரெகுநாதபுரம் நதிப்பாறையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

பணகுடி பேரூராட்சி வாா்டு 1-இல் 2025-2026 கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.64 லட்சத்தில் சேரன்மகாதேவி பிரதான சாலை முதல் ஆதியம்பிள்ளை ஓடை வரை தாா்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். பணகுடி பேரூராட்சி வாா்டு எண் 1-இல் 2025-2026 சிறப்பு நிதித் திட்டத்தில் ரூ.1.17 கோடியில் அனுமன் நதிச் சாலையில், தாா்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, தெற்கு வள்ளியூா் ஊராட்சி கீக்குளத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணி, வேம்பிலான்குளம் ஊராட்சி மருதப்பபுரத்தில் ராதாபுரம் - வள்ளியூா் சாலையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சிகளில், பணகுடிபேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் மோகன்ராம், பணகுடி ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.சங்கா், சொரிமுத்து, வெள்ளைச்சாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஹரீம், முத்துகுமாா், தி.மு.க. கருணாநிதி, மகளிரணி மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க