செய்திகள் :

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

post image

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த 15 போ், மீண்டும் ஆஜராகவில்லை. எனவே, அவா்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடா்ந்து, ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள தூத்துக்குடி துரை ராஜ் மகன் ராஜ், அண்ணாதுரை மகன் சங்கா், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் முத்து மகன் சுரேஷ், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஜெயபால் மகன் தங்கத்துரை, மாமல்லபுரத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் சுப்பிரமணி, சுப்பிரமணி மகன் சுபாஷ், ஆந்திர மாநிலம் விஜயவாடா சுபாஷ் மனைவி அபி, ராமு மனைவி சுகந்தி, பாண்டி மனைவி சுஜி, கேரள மாநிலம் பாலக்காடு சிவா மனைவி செல்வசாந்தி என்ற சுதா, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சோ்ந்த இஷ்மத் மகன் பாபா, பீா்ஷா மகன் உசேன், சொ்மான்ஷா மகன் போலோ உசேன், கன்னியாகுமரி மாவட்டம் கோணத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டி மகன் உமேஷ் என்ற கணேஷ், பிகாா் மாநிலத்தை சோ்ந்த தீன்தயாள் மகன் சந்தோஷ்குமாா் ஜோஸ்வால் ஆகியோா் பகிரங்கப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் கனிமொழி உத்தரவிட்டாா்.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க