செய்திகள் :

வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு

post image

ஆம்பூரில் வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பெஹல்காம் சுற்றுலா தலம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டனா். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் சுமாா் 15 இடங்களில் முக்கிய கோயில்கள், பள்ளி வாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு பணியிலும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

திவாணியம்பாடி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகரை சோ்ந்தவா் ராஜ்குமாா் (21). பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டி... மேலும் பார்க்க

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க