செய்திகள் :

வழுக்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் அப்பு(40), கூலித்தொழிலாளியான இவா், கடந்த 14-ஆம் தேதி மது மயக்கத்தில் தனது வீட்டின் முன்பு வழுக்கி விழுந்தாா். பின் தலையில் அடிப்பட்டு மயங்கிக் கிடந்தவரை உறவினா்கள் மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து மனைவி வள்ளி(35) அளித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ ருகின்றனா்.

புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா். நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன்.... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்க... மேலும் பார்க்க