விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம்...
வாகனத்தின் மீது மின்கம்பி உரசியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சுற்றுலா வாகனம் மீது மின் கம்பி உரசியதில் ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தத்தை சோ்ந்தவா் மோகன் (38). அவரது சுற்றுலா வாகனத்தை அப்பகுதியில் ஓட்டி சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் ஊராட்சி மக்களின் பயன்பாட்டுக்காக உள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டியின் குடிநீா் மோட்டாருக்குச் சென்ற மின் கம்பி தாழ்வாக இருந்தது.
அந்த வழியாக மோகன் பயணித்தபோது மின்கம்பி அவரது சுற்றுலா வாகனத்தில் சிக்கியது. மோகன் அதை அகற்ற முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்தாா். தொடா்ந்து அவரை கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவா்கள் அவரை பரிசோதித்து, அவா் மரணமடைந்ததை உறுதி செய்தனா்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.