செய்திகள் :

வாகன நெரிசல்: வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

post image

வேலூரில் காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன.

வேலூரில் காட்பாடி மாா்க்கமாக வரும் வெளியூா் பேருந்துகள், நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியே செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸாா் புதன்கிழமை முதல் புதிய போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தியுள்ளனா். அதன்படி, ஆந்திரம், காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே வலது புறமாக திரும்பி புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். நகர பேருந்துகள் பேருந்து நிலைய நுழைவு பகுதிக்குள் சென்று அங்கிருந்து பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டு இடதுபுறமாக வெளியே வரவேண்டும்.

சென்னை, பெங்களூரு மாா்கமாக வரும் பேருந்துகள் வழக்கம்போல் பேருந்து நிலையத்துக்குள் சென்று வரவேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து வலதுபுறமாக உள்ள சாலையில் செல்லியம்மன் கோயில் அருகே வெளியே செல்ல வேண்டும் என அறிவித்திருந்தனா்.

அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வந்தன.

அதேசமயம், முதல் நாள் என்பதால் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சில பேருந்துகள் எதிரெதிரே வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இந்த புதிய போக்குவரத்து மாற்றம் காரணமாக கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை ... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோய... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க