செய்திகள் :

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க இணையதளம்: ஆம் ஆத்மி

post image

வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஆம் ஆத்மி சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் செய்து 10 சதவீதம் வரையிலான வாக்கு வித்தியாசத்தை பாஜக ஏற்படுத்த சாத்தியமுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் ஆம் ஆத்மி புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விடியோவில் அவர் பேசியதாவது,

’’வாக்குப் இயந்திரங்கள் மூலம் 10% வாக்கு வித்தியாசத்தை பாஜக ஏற்படுத்தும் என எங்களுக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அதாவது ஆம் ஆத்மி கட்சி 15% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தால், 5% வாக்குகள் முன்னிலை என்று மட்டுமே பதிவாகிறது. அதனால் அனைத்துத் தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தைப் பெற ஆம் ஆத்மிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க இதுவே வழி.

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் கிடைத்த பாடத்தின் விளைவாக தற்போது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனைச் செய்துள்ளோம்.

வாக்குப் பதிவு நாளான பிப். 5ஆம் தேதி இரவு அனைத்து வாக்குச் சாவடிகள் குறித்தும் 6 முக்கியத் தரவுகளை பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இது இயந்திரங்களை தொழில்நுட்ப ரீதியாகத் தாக்காது. யாரையும் ஹேக் செய்ய அனுமதிக்காது. வாக்குப்பதிவு நாளில் பாஜகவினர் ஏதேனும் குளறுபடிகள் செய்தால், இந்த தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தில்லிக்கு பிப். 5-ல் பொது விடுமுறை!

பயன்பாட்டு மொழியாக மராத்தி: மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப... மேலும் பார்க்க

வாராந்திர பணி நேரத்தை 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

புது தில்லி: வாராந்திர பணி நேரத்தை 70 முதல் 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணியாளா்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லாா்சன் அண்ட் டூப்ரோ ... மேலும் பார்க்க

வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புது தில்லி: வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசு இயற்றிய வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023... மேலும் பார்க்க

தில்லிக்கு பிப். 5-ல் பொது விடுமுறை!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அன்றைய தினம் இயங்காது எனத... மேலும் பார்க்க

2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்... மேலும் பார்க்க

தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. டிச. 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் பார்க்க