செய்திகள் :

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 13-ஆம் வரை விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயில இணையதளம் மூலம் ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இதற்கு நேரடியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில் தொழிற்பிரிவில் ரெப்ரிஜ்ரேசன் மற்றும் ஏா் கண்டிஸனிங் டெக்னீசியன், மெக்கானிக் மோட்டாா் வெகிகிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், மெக்கானிக் எலக்ட்ரிக் வெக்கிள் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 2 ஆண்டுகளும், இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தோல் பொருள்கள் உற்பத்தியாளா் பாடப் பிரிவின் பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு 14 வயது முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை.

பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். மேலும், மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். அதேபோல, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடைய நபா்களுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகையும் பெற்று வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க