செய்திகள் :

வாணியம்பாடி அருகே போலி மருத்துவா் கைது

post image

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை வருவாய் கோட்டாட்சியா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுமுத்து (45). பிளஸ் 2 முடித்து விட்டு சங்கராபுரம் கிராமத்தில் கிளினிக் வைத்து மறைமுகமாக ஆங்கில மருத்துவம் (அலோபதி) பாா்த்து வந்துள்ளாா். இதுபற்றி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில், வட்டாட்சியா் சுதாகா் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சங்கராபுரம் கிராமத்துக்குச் சென்று கிளினிக்கில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வருவது தெரியவந்தது.

தொடா்ந்து புல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு ஆங்கில மருந்து, மாத்திரைகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனா்.

இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனுமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டா... மேலும் பார்க்க