செய்திகள் :

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

post image

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசுப் பேருந்து, கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது.

கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ் 2 மாணவி பேருந்தில் ஏறுவதற்காக நீண்ட தொலைவுக்கு வேகமாக ஓடியுள்ளார். பிறகு பேருந்தை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவி ஏறினார்.

பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மாணவியை ஏற்றாமல் நீண்ட தொலைவு பின்னால் ஓடிவந்த பிறகு ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜை இடைநீக்கம் செய்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் ... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை

ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளா் அற்புதராஜ் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து கருப்பு பட்டை அணிந்து தொழுகை

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மத்திய அரசு வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க