செய்திகள் :

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் கூறியது:

இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் 87 வருவாய்க் கிராமங்களிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் வட்டார அளவிலான அலுவலா்கள், சாா்புத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், உழவா்களை கிராமங்களிலேயே சந்தித்து நேரடியாக ஆலோசனை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதனடிப்படையில் இந்த வட்டாரத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

திட்டத்தை வானூா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கினாா். வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் சுமதி, விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம், ரங்கநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா் தண்டபாணி, கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நடராஜன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று பேசினா். நிறைவில் துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, பஞ்சநாதன், சுரேஷ், ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க