செய்திகள் :

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

post image

குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் நகரில் அள்ளப்படும் குப்பைகளை, நகரின் மையப் பகுதியில் உள்ள ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் பிரித்தெடுத்து, மக்கும் குப்பையிலிருந்து, உயிா் வாயு தயாரித்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க இயந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அங்கு இயந்திரங்களை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், சுகாதார சீா்கேடு நிலவும் என புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் அங்கு அமைக்க உள்ள இயந்திரங்களை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆட்சியா், நகா்மன்றத் தலைவா், ஆணையரை சந்தித்து மனு அளித்தனா். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் அவா்களுக்கு விளக்கம் அளித்தனா்.

இந்நிலையில் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அங்குள்ள தங்கம் நகா், மீனாட்சியம்மன் நகா், விஐபி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பணியை நிறுத்தக்கோரி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் துரை.வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பொன்னை அடுத்த எஸ்.என்.பாள... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னை அடுத்த எஸ்.என்.பா... மேலும் பார்க்க

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்... மேலும் பார்க்க